ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் "சர்வதேச குறைமாத குழந்தைகள்" தினம் கடைபிடிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் "சர்வதேச குறைமாத குழந்தைகள்" தினம் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. 

இவ்விழாவிற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் குறைபிரசவத்தில் பிறந்து தற்போது நலமுடன் இருக்கும் பல குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். மதுரை, திருச்சி, ஈரோடு போன்ற மாவட்டங்களிருந்தும் பலர் விழாவிற்காக வந்திருந்தனர். 

இவ்விழாவிற்கு மருத்துவக் குழு தலைவரான டாக்டர். சுகுமாரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், 25 வருடங்களுக்கு முன்னர் இம்மருத்துவமனையில் தொடங்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கான பிரிவு தற்போது 40 இளங்குழந்தைகளை அனுமதிக்கும் வசதியுடன், உயர் அழுத்த செயற்கை சுவாச கருவிகள், சிபாப், போக்குவரத்து இன்குபேட்டர், 2 தேர்ச்சிபெற்ற சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என வளர்ந்திருப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.



பச்சிளங்குழந்தை பிரிவின் தலைவரான டாக்டர். சித்தார்த்த புத்தவரப்பு "மருத்துவ அறிவியலின் வளர்ச்சியால் இன்று 24- 25 வார சிசுக்களையும் காப்பாற்றுவது சாத்தியமாகியுள்ளது" என்று கூறினார். சரியான முறையில் செயற்கை சுவாசம் அளித்தல், நோய் தொற்று கட்டுபாடு மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஏதுவான நெறிமுறைகளின் மூலமும் இக்குழந்தைகளை மூளை அழற்சி, உடல் செயல்பாட்டு குறைகளின்றியும் காப்பற்றலாம். இக்குழந்தைகளின் பராமரிப்பு மருத்துவமனையை விட்டு சென்ற பிறகும் முதல் சில ஆண்டுகளுக்கு தனி கவனத்துடன் இருக்க வேன்டும். மக்களிடமும், மருத்துவர்களிடமும் விழிப்புணர்வை அதிகரிக்கவே இந்நிகழ்ச்சி" என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், 1000 கிராம் குழந்தையாக இம்மருத்துவமனையில் பிறந்து இன்று வெற்றிகரமாக மருத்துவ படிப்பினை முடித்துள்ள மாணவி, 24 வாரதில் பிறந்து இன்று ஆரோக்கியதுடம் இருக்கும் இரட்டையரின் பெற்றோர் என பலரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...